பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 263 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களில் மேலும் 45 கொள்கலன்களை இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கு நேற்று வந்தடைந்த எவர் ஜீனியஸ் என்ற கப்பலின் மூலம் இந்த கொள்கலன்கள் இன்று காலை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த கப்பல் இன்று இரவு 8.00 மணியளவில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டில், இலங்கை சுங்கப் பிரிவின் விசாரணையில், பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வகைப்படுத்தப்படாத மற்றும் அபாயகரமான கழிவுகள் அடங்கிய 263 கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
133 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 130 கொள்கலன்கள் ஏற்கனவே துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டுநாயக்கவில் உள்ள முதலீட்டுச் சபையின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனமொன்றின் வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இந்த கொள்கலன்கள் உடன்படிக்கையின் விதிகளுக்கு மாறாகவும், தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் விதிகளை மீறும் வகையிலும் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்தது.
பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 263 கொள்கலன்களையும் பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி 2020 ஆம் ஆண்டு 133 கழிவு கொள்கலன்களை திருப்பி அனுப்ப இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்தது.
மேலும், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள தனியார் நிறுவன வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 130 கொள்கலன்களை இலங்கை சுங்கம் பாதுகாத்துள்ளதுடன், கடந்த வருடத்தில் ஒன்பது தடவைகளில் 85 கொள்கலன்களை பிரித்தானியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM