தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க கலாவினோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் நிகழ்கால செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டன. பின்னர் புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது.
அதன்படி புதிய நிர்வாகத்தின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக எஸ்.ஸ்ரீகஜன் (வீரகேசரி) தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக கே.ஜெயந்திரன் (தினக்குரல்) ஆகியோரும் உபதலைவர்களாக லியோ நிரோஷ தர்ஷனும் யாழ்.தர்மினி பத்மநாதனும் உப செயலாளராக சு.சிவசண்முகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாளராக ப.விக்னேஸ்வரன் (சூரியன் எப்.எம்.), உப பொருளாளராக எஸ் வாஸ் கூஞ்ஞை ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆர். சிவராஜா , எஸ். அனந்த பால கிட்ணர் , என். ஜெயகாந்தன் , வீ.பிரியதர்ஷன் , ஆர். சேதுராமன் , கி. லக்ஸ்மன் சிசில் , பிரியங்கா சந்திரசேகரம் , கே.ஹரேந்திரன் , கே. பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் வடமாகாண இணைப்பாளராக கணபதி சர்வானந்தா, கிழக்கு மாகாண இணைப்பாளராக எஸ். சரவணன் மற்றும் மலையக இணைப்பாளராக சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோருடன் ஒன்றியத்தின் மேலதிக இணைப்பாளராக தர்மினி பத்மநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வருட கால கொரோனா நெருக்கடி நிலையின் பின் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM