அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தேச தொழிசங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தம்

19 Feb, 2022 | 06:45 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கத்திடம் வினவிய போது ,

சம்பள பிரச்சினை அமைச்சரவை முடிவுகள் ஊடாக தீர்க்கப்படக் கூடாது என்பதே எமது பிரதான கோரிக்கையாகும். 

தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கு அனுப்பி அதனூடாகவே சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் , அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.

எம்மால் முன்வைக்கப்பட்ட இரண்டாவது கோரிக்கை தேசிய சம்பள கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். அதற்கமைய தேசிய சம்பள கொள்கை பாதுகாக்கப்படும் என்றும் , எவ்விதத்திலும் அதனை மீறி செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் இவ்வாண்டுக்கான இடமாற்ற பட்டியலை உடனடியாக வெளியிடுமாறு இந்த பேச்சுவார்த்தையின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

அத்தோடு இலங்கை மருத்துவ சபையின் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு தொடர்பான முதலாவது படிமுறை நிறைவடைந்துள்ளது.

அரச அச்சகத்தினால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னரே அது நடைமுறைப்படுத்தப்படும். 

இதனுடன் தொடர்புடைய 7 படிமுறைகளில் ஒன்று மாத்திரமே நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள படிமுறைகளை துரிதப்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 இதளை அடிப்படையாகக் கொண்டு எமது தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22