(ஏ.என்.ஐ)
சைண்டாக் திட்டத்தில் மறைக்கப்பட்ட செலவுகள் குறித்து பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் இஸ்லாமாபாத்தை எச்சரித்துள்ளனர். சீன-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டத்தில் அதன் இலாபம் குறைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் அச்சப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் குறிப்பிடுகின்றன.
சைண்டாக் காப்பர்-கோல்ட் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் மறைந்திருக்கும் செலவுகள் அரசாங்கத்தின் பங்கு இலாபத்தைக் குறைக்கும் என்று சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாதார ஆணையத்தின் தலைவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
செலவுகள் நியாயமான முறையில் முன்பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய ஒரு தொழில்முறை நபரை அல்லது நிறுவனத்தை பணியமர்த்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் பல திட்டப்பணிகளின் மெதுவான முன்னேற்றம் குறித்து பாகிஸ்தான் மீது சீன அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்ததால், திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்க இஸ்லாமாபாத்தை கேட்டுக் கொண்டனர். பெய்ஜிங் இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் சீன திட்டங்களுக்கு எதிராக பாகிஸ்தானில் உள்நாட்டு எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM