(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடளாவிய ரீதியில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்.வடமராச்சி - நெல்லியடி பகுதியில் கொலின்ஸ் மைதானத்தில் மக்கள் சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் இந்த மக்கள் சக்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசாங்கத்திற்குள் பங்காளி கட்சிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், சுதந்திர கட்சி அண்மைக்காலமாக பகிரங்கமான விமர்சனங்களையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகிறது. அது மாத்திரமின்றி கடந்த இரு மாதங்களாக புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகத்தேர்வுகளையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிரேஷ்ட உறுப்பினர்கள் நடத்தியிருந்தனர்.
அத்துடன் மாவட்ட மட்டத்தில் சு.க. பொதுக் கூட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் , இதற்காக பல தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
தற்போது சு.க. அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நிலைப்பாட்டில் இல்லை என்று அறிவித்துள்ள போதிலும் , எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM