பூஜித் - ஹேமசிறியை விடுதலை செய்வதா ? இல்லையா ? - இன்று தீர்மானம்

Published By: Vishnu

18 Feb, 2022 | 07:32 AM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை செய்வதா அல்லது, பிரதிவாதித் தரப்பு சாட்சியங்களை ஆராய அனுமதியளிப்பதா என்பது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. 

இன்று (பெப்ரவரி 18) இது குறித்த நீதிமன்றின் தீர்மானத்தை அறிவிப்பதாக, இந்த வழக்கினை விசாரிக்க என அமைக்கப்பட்டுள்ள  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர்  அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த மாதம் அறிவித்தது.

கடந்த  2021 மே மாதம் 3 ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக, 2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்,  உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து  கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய தகவல்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கை  முதலில் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டது.

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவருக்கும் எதிராக மூவர் கொண்ட விஷேட நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் தனித்தனியாக வழக்கு விசாரணைகளை இரண்டினை முன்னெடுக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைக்கும் முகமாகவே இவ்வாறு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. 

அதற்கான கோரிக்கை சட்ட மா அதிபரால், பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் கடந்த 2021  மே 3 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 7 ஆம் திகதிக்கும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,  தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளர்ளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் இருந்து கிடைக்கப் பெற்ற,  இரகசிய மற்றும் உளவுத் தகவல்களை கணக்கில் கொள்ளாது இருந்தமை, அதனை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக  சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் மத வழிபாட்டுத் தளங்கள், ஹோட்டல்கள் மற்றும் வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல் நடாத்த  ஒருங்கிணைந்துள்ளதாகவும்,   இறுதிக் கட்ட தயார் நிலையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் அளிக்கப்பட்டும் அவற்றை கணக்கில் கொள்ளாமல் பராமுகமாக நடந்துகொண்டமை ஊடாக 279 பேரின் மரணத்துக்கும்  சுமார் 500 பேர் வரையிலானோரின் காயங்களுக்கும்  பொறுப்புக் கூற வேண்டும் எனும் வகையில், பூஜித், ஹேமசிறிக்கு எதிராக  தண்டனை சட்டக் கோவையின் 296 மற்றும் 300 ஆம் அத்தியாயங்களின் கீழ் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த 2019 ஜூலை 2 ஆம் திகதி ஏப்ரல் 21 தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.  

தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327,328 மற்றும் 410 ஆம் அத்தியாய்ங்களின் கீழ்   இவர்கள் இருவரும் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்ததக கூறி அவர்கள் அப்போது கைது செய்யப்பட்டனர். 

எனினும் 2019 ஜூலை 9 ஆம் திகதி, அப்போதைய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன குறித்த இருவருக்கும் பிணையளித்திருந்தார்.

எனினும் அப்பிணை உத்தரவை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு மனுக்கமைய, இந்த விவகாரத்தில் பூஜித், ஹேமசிறி ஆகியோரின் பிணை ரத்து செய்யப்பட்டு 2019 ஒக்ரோபர் 9 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மேல் நீதிமன்றம் ஊடாக அவர்கள் பிணைப் பெற்றுக்கொண்ட நிலையில்,  அந்த விடயம் குறித்த விசாரணைகள் நிறைவடைந்திருந்தன. 

இவ்வாறான நிலையிலேயே தற்போது அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் மேல் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு நீதிபதிகளும் பெயரிடப்பட்டு, குற்றப் பத்திரிகையும் கையளிக்கப்பட்டு விசாரணைகள் தனித்தனியாக இடம்பெற்று வருகின்றன.

அதன்படியே கடந்த ஜனவரி 20 ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்கள் நிறைவுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08