( எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இசைக்கவென இறக்குமதி செய்யப்பட்ட உயர் பெறுமதிமிக்க மூன்று புராதன பியானோ இசைக் கருவிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (17) கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல உத்தரவிட்டார்.
பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கடந்த 2021 ஜூலை மாதம் முதலாம் திகதி சி.ஐ.டி.யில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்ததாக விசாரணை அதிகாரிகள் இன்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்தனர். இதன்போதே கொழும்பு பிரதான நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
இது தொடர்பில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சட்ட அதிகாரியான சம்பா சமன்மலி பெரேரா என்பவரின் வாக்கு மூலம் பெறப்பட்டதாக நீதிமன்றுக்கு அறிவித்த விசாரணையாளர்கள், இதுவரையிலான விசாரணைகளுக்கு அமைய 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
இந் நிலையில் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கலை விரைவில் கைது செய்து மன்றில் ஆஜர்ச் செய்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு - 2 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க தலைமையிலான விசாரணை அதிகாரிகள் மன்றில் ஆஜராகி விடயங்களை முன் வைத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM