முல்லைத்தீவு பண்ணையில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழப்பு -  பெண்ணொருவர் கைது

Published By: Digital Desk 4

17 Feb, 2022 | 04:31 PM
image

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், ஒதியமலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழந்ததையடுத்து பண்ணை ஒன்றின் உரிமையாளரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்ணை ஒன்றின் உரிமையாளரான பெண்ணே நேற்று (16) கைது செய்யப்பட்டதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து முல்லைத்தீவு பிரிவுக்குட்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் சந்தேக நபரின் பண்ணையிலிருந்து யானையின் உடலை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏறக்குறைய 08 வயது இருக்கும் யானை, மின்சாரம் தாக்கி இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32