(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது. எரிபொருளின் விலையை அதிகரித்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், விலையை அதிகரிக்காவிடின் கூட்டுத்தாபனம் நிதி நெருக்கடிக்குள்ளாகும்.
எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அனைத்தையும் தற்காலிகமாக இரத்து செய்தால் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான தேவை ஏற்படாது என்பதை நிதியமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 4 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை எதிர்க்கொண்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியினால் எரிபொருள் இறக்குமதியில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறான நிலைமையில் இலங்கைக்கு கடனடிப்படையில் எரிபொருளை விநியோகிக்குமாறு இந்தியாவிடம் விடுத்த கோரிக்கைக்கமைய 500 மில்லியன் டொலர்களை விநியோகிக்க இந்தியா தீர்மானித்திருந்தது.
இந்திய உயர்ஸ்தானிகரின் பங்களிப்புடன் இந்தியாவின் ஐ.ஓ,சி.நிறுவனத்தினால் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்கப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.
இலங்கை மின்சார சபை 80000 மில்லியன் கடனாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான ரூபாவை விநியோகித்தால் அதற்கு இணையான டொலரை விநியோகிப்பதாக மத்திய வங்கி குறிப்பிடுகிறது.
ஸ்ரீ லங்கா எயார் லைன் நிறுவனத்திற்கும்,இலங்கை மின்சார சபைக்கும் கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகப்பதால் பாரிய நிதி நெருக்கடியை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்க்கொண்டுள்ளது.
ஒரு லீற்றர் டீசலை 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்து அதனை 100 ரூபாவிற்கு விற்கும் போது 50 ரூபாவினால் நட்டமடைவோம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கை மின்சார சபை ரூபாவை விநியோகித்தால் அவர்களுக்கு எரிபொருளை விநியோகிக்க தயாராகவுள்ளோம்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள யோசனையை நிதியமைச்சிடம் முன்வைத்துள்ளேன்.
நிதி நெருக்கடி நிலைமையினை முகாமைத்துவம் செய்ய கூட்டுத்தாபனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டங்களை முன்வைப்பது நியாயமானது.
எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அனைத்தையும் தற்காலிகமாக நீக்கினால் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது என்பதை நிதியமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். விலை அதிகரிக்காவிடின் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொள்ளும். இவ்விரு பிரச்சினைகள் தீர்வு காண அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM