எரிபொருள் இறக்குமதி வரிகளை இரத்துச் செய்தால் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் தேவை கிடையாது - கம்மன்பில

Published By: Digital Desk 3

16 Feb, 2022 | 07:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது. எரிபொருளின் விலையை அதிகரித்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், விலையை அதிகரிக்காவிடின் கூட்டுத்தாபனம் நிதி நெருக்கடிக்குள்ளாகும். 

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அனைத்தையும் தற்காலிகமாக இரத்து செய்தால் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான தேவை ஏற்படாது என்பதை நிதியமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 4 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை எதிர்க்கொண்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியினால் எரிபொருள் இறக்குமதியில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறான நிலைமையில் இலங்கைக்கு கடனடிப்படையில் எரிபொருளை விநியோகிக்குமாறு இந்தியாவிடம் விடுத்த கோரிக்கைக்கமைய 500 மில்லியன்  டொலர்களை விநியோகிக்க இந்தியா தீர்மானித்திருந்தது.

இந்திய உயர்ஸ்தானிகரின் பங்களிப்புடன் இந்தியாவின் ஐ.ஓ,சி.நிறுவனத்தினால் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்கப் பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.

இலங்கை மின்சார சபை 80000 மில்லியன் கடனாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான ரூபாவை விநியோகித்தால் அதற்கு இணையான டொலரை விநியோகிப்பதாக மத்திய வங்கி குறிப்பிடுகிறது.

ஸ்ரீ லங்கா எயார் லைன் நிறுவனத்திற்கும்,இலங்கை மின்சார சபைக்கும் கடன் அடிப்படையில் எரிபொருளை விநியோகப்பதால் பாரிய நிதி நெருக்கடியை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்க்கொண்டுள்ளது.

ஒரு லீற்றர் டீசலை 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்து அதனை 100 ரூபாவிற்கு விற்கும் போது 50 ரூபாவினால் நட்டமடைவோம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கை மின்சார சபை ரூபாவை விநியோகித்தால் அவர்களுக்கு எரிபொருளை விநியோகிக்க தயாராகவுள்ளோம்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள யோசனையை நிதியமைச்சிடம் முன்வைத்துள்ளேன்.

நிதி நெருக்கடி நிலைமையினை முகாமைத்துவம் செய்ய கூட்டுத்தாபனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டங்களை முன்வைப்பது நியாயமானது.

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அனைத்தையும் தற்காலிகமாக நீக்கினால் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது என்பதை நிதியமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். விலை அதிகரிக்காவிடின் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொள்ளும். இவ்விரு பிரச்சினைகள் தீர்வு காண அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21