அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொக்கைன் போதைப் பொருளை கடத்திச் சென்ற 22 வயதுடைய இளைஞர் விசேட அதிரடிப்படை யினரால் இன்று (15) கைது செய்யப்பட்டார்.
பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கைகாட்டி சந்தி என்கின்ற பகுதிக்கு விரைந்த அதிரடிப்படையினர் சூட்சுமமான முறையில், குறித்த நபரை கைது செய்தனர்.
விற்பனைக்காக கொண்டு செல்ல முற்பட்ட 5 கிராம் 860 மில்லி கிராம் கொக்கைன் போதைப்பொருள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் என படையினர் தெரிவிக்கின்றனர்.
விசேட அதிரடிப் படையினரின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM