சிவனொளிபாதமலைக்கு இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட பிரதேசங்கள் வழிகளின் ஊடாக யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வோர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எவ்வாறாயினும், கொரோனா தடுப்பூசி அட்டைகளை உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என தெரிவித்த மாலினி லொகுபோதாகம, தடுப்பூசி அட்டை உடன் இருப்பது பாதுாப்பானது எனவும் தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றளர். புதிய வைரஸ் தொற்று நோய்கள் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM