யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற `நண்பேண்டா` இசை நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கு கொள்வதற்காக வருகைதந்த இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்வின் ஹோட்டலில் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த சிறார்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை இலவசமாக நடாத்தினால் நல்லதாக அமையும். அதற்கான முயற்சிகளை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் நின்று கொண்டே சொல்கின்றேன். இங்கு உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகளை இலவசமாக நடாத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் அந் நிகழ்ச்சியானது எதற்காக பயன்பட வேண்டுமோ அதற்காக முழுமையாக பயன்பட வேண்டும். இவ்வாறான முயற்சிக்கு நாங்கள் நிச்சையமாக பங்களிப்பு வழங்குவோம்.
இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கு பல குழுக்கள், நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் குறைகூறுவதை நிறுத்த வேண்டும்.
நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை இங்கு நடாத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறான நிகழ்வுகளை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் ஒன்றிணைந்து வாருங்கள் ஒன்று சேர்ந்து நடாத்துவோம்.
இலங்கை இசைக்கலைஞர்களும் இசைக் கல்வியை கற்றுக்கொள்ள கூடிய ஒர் கல்லூரியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை யாழ்.இந்திய துணைத்தூவர் ஊடாக மிக விரைவில் கலைஞர்களுக்கும் மக்களும் அறிவிப்போம். அத்துடன் இக் கல்லூரியில் நாமும் வந்து இசைக் கல்வியை போதனை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM