பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்

Published By: Nanthini

10 Oct, 2016 | 11:25 AM
image

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யி­லான பிர­மாண்­ட­மான இசை நிகழ்ச்­சி­களை இல­வ­ச­மாக நடத்தி தரு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம் என தென்­னிந்­திய பிரபல பின்னணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வா­றான செயற்­பாட்­டிற்கு அனைத்து தரப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

யாழ்ப்­பா­ணத்தில் நேற்று நடை­பெற்ற `நண்­பேண்டா` இசை நிகழ்ச்­சியில் ஒன்றில் பங்கு கொள்­வ­தற்­காக வரு­கை­தந்த இவர்கள் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஜெட்வின் ஹோட்­டலில் நேற்று நண்­பகல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். 

இதில் கலந்து கொண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் இலங்­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு பெற்­றோர்­களை இழந்த சிறார்­க­ளுக்­காக ஒரு இசை நிகழ்ச்­சியை இல­வ­ச­மாக நடாத்­தினால் நல்­ல­தாக அமையும். அதற்­கான முயற்­சி­களை எடுப்­பீர்­களா? என கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதற்கு பதி­ல­ளிக்கும் போதே இரு­வரும் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளனர்.  

அவர்கள் மேலும் தெரி­விக்­கையில்:

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் நின்று கொண்டே சொல்­கின்றேன். இங்கு உள்­ள­வர்­க­ளாக இருந்­தாலும் அல்­லது வேறு யாராக இருந்­தாலும், இப்­ப­டிப்­பட்ட நிகழ்­வு­களை இல­வ­ச­மாக நடாத்திக் கொடுப்­ப­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். 

ஆனால் அந் நிகழ்ச்­சி­யா­னது எதற்­காக பயன்­பட வேண்­டுமோ அதற்­காக முழு­மை­யாக பயன்­பட வேண்டும். இவ்­வா­றான முயற்­சிக்கு நாங்கள் நிச்­சை­ய­மாக பங்­க­ளிப்பு வழங்­குவோம்.

இவ்­வா­றான நிகழ்­வு­களை ஒழுங்கு செய்­வ­தற்கு பல குழுக்கள், நிறு­வ­னங்கள் உள்­ளன. அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்­காமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து  நிகழ்­வு­களை ஒழுங்கு செய்ய வேண்டும். குறிப்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் குறை­கூ­று­வதை நிறுத்த வேண்டும்.

 நிகழ்­வு­களை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழ­கங்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான நிகழ்­களை இங்கு நடாத்­து­வ­தற்கு நாங்கள் தயா­ரா­கவே உள்ளோம்.

இவ்­வா­றான நிகழ்­வு­களை எதிர்ப்­ப­வர்­களும், ஆத­ரிப்­ப­வர்­களும் ஒன்­றி­ணைந்து வாருங்கள் ஒன்று சேர்ந்து நடாத்­துவோம்.

இலங்கை இசைக்­க­லை­ஞர்­களும் இசைக் கல்­வியை கற்­றுக்­கொள்ள கூடிய ஒர் கல்லூரியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை யாழ்.இந்திய துணைத்தூவர் ஊடாக மிக விரைவில் கலைஞர்களுக்கும் மக்களும் அறிவிப்போம். அத்துடன் இக் கல்லூரியில் நாமும் வந்து இசைக் கல்வியை போதனை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38