பண்டிகை காலத்திற்கான விஷேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகுமென இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக தெரிவித்துள்ளார்.
தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி வரை பண்டாரவளையிலிருந்து கொழும்புக்கும் மற்றும் மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குமான விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாத்தறையில் காலை 6.20 க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 6.55க்கு யாழ்ப்பாண ரயில் நிலையைத்தை சென்றடையவுள்ளதுடன், முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 8.58 மணிக்கு மாத்தறையை சென்றடையவுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து சிலாபத்திற்கும், சிலாபத்திலிருந்து களுத்துறை தெற்கிற்கும், களுத்துறையிலிருந்து நீர்கொழும்பிற்கும், நீர் கொழும்பிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் எதிர்வரும் 24,25,26 ஆகிய மூன்று நாட்களும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM