நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 18 வயதுடைய இளைஞர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு- கிரான்பாஸ்
கிரான்பாஸ் - களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8 கிராம் 70 மில்லிகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது 18 வயதுடைய வெல்லம்பிட்டியவை சேர்ந்த இளைஞன் கைது
செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெத்துள்ளனர்.
பேலியகொடை
பேலியகொடை - களனி பாலத்திற்கு அருகில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 240 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை
கடவத்தை – மங்கடை பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 300 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய தெல்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். கடவத்தை
பொலிசார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தலங்கமை
தலங்கமை மேற்கொண்ட இருவேறு சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கலல்கொடை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு சுற்றிவளைப்பில் அகுரைகொடை பிரதேசத்தில் 5 கிராம் 300 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் தலங்கமை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொரளை
பொரளை - கொதமீபுரை பிரதேசதில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் 510 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுனுகம்வெகரை
லுனுகம்வெகரை - ரணவர்னாமை பிரதேசத்தில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 745 கஞ்சா போதைப்பபொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ரணவர்னாவை, தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்னர். சம்பவம் தொடர்பில் லுனுகம்வெகரை பெலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM