(எம்.மனோசித்ரா)
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் நேரடி ஆலோசனைகளுக்கமைய 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 - 2.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் பிலியந்தல பொலிஸ் பிரிவில் , கங்காராம வீதி - கிரோன்விஸ் டெரஸ் தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வரும் சமுதித சமரவிக்கிரம என்ற ஊடகவியலாளர் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு வீட்டிற்குள் திரப்பொருளொன்றும் விசப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் நேரடி ஆலோசனைக்கமைய , மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய கல்கிஸை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 3 விசேட பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்கிஸை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர் , கெஸ்பேவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மற்றும் பிலியந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு குற்ற ஸ்தள பரிசோதனைக் குழுவினர் , கைரேகை சோதனை பிரிவினர் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு , மோப்ப நாய்களைப் பயன்படுத்தி சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புலனாய்வு பிரிவினரால் சி.சி.ரி.வி. காணொளிகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு குழுவினர் நேரடி சாட்சிகளை சேகரிப்பதற்காக களத்திற்கு சென்றுள்ளனர். இது தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM