சமூக ஊடக தளமான பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் சம்பந்தப்பட்ட இரண்டு விருந்துபசார நிகழ்வுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம், தஹையாகம ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்றில் ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள்களுடன் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக ஹோட்டல்களில் விருந்துபசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
இதேவேளை காதலர் தினமான இன்றைய தினம் ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM