(எம்.எஸ்.தீன்)
ழேவந:- மர்ஹும் அஸ்ரப் மாத்திரமே 'இணக்கப்பாட்டு அரசியலை' வெற்றிகரமாக முன்னெடுத்தார்.
அவர் வழியில் வந்ததாக கூறுபவர்கள் 'இணக்கப்பாட்டு அரசியல்' என்பதை மறந்து 'அடிமைஅரசியலை' செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஏமாறுகின்றவர்கள் உள்ளவரை ஏமாற்றுகின்றவர்கள் தமது சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இத்தகையதொரு காரியத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆயினும் அவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த தலைவர்களாகவும், மரியாதைக்கு உரியவர்களாகவும் மதிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இதனை மாற்றியமைக்காத வரை முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்த வாழ முடியாது.
திறானியற்றவர்களையே தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்து கொண்டிருப்பது முஸ்லிம் அரசியலில் காணப்படும் மிகப் பெரிய பலவீனமாகும்.
கடந்த 20வருடங்களுக்கு மேலாக தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வழங்கிய சமூகம் சார்ந்த எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி பசப்பு வார்த்தைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களும் அவர்களின் வார்த்தைகளில் பொய்களே உள்ளனவென்று புரிந்துள்ள போதிலும் அவர்களுக்கே வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காது பம்மாத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதுள்ள அதேவேளைரூபவ் மாற்று இனத்தவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM