இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய டி:20 கிரிக்கெட் ஆட்டங்களில் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி:20 ஆட்டத்தில் சிக்ஸர் ஒன்றை தடுக்கும் முயற்சியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார முயற்சியில் அவரின் தலை தரையில் மோதியது. இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது.
இந் நிலையில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர், மூளையதிர்ச்சி பயத்தில் இருந்து முழுமையாக குணமடைவதற்காக இலங்கையுடனான எதிர்வரும் ஆட்டங்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் ஸ்டீவ் ஸ்மித் அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்காக முழுத் தகுதியுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சிட்னி மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியின் களத்தடுப்பு சம்பவத்திற்குப் பிறகு ஸ்மித்துக்கு அவுஸ்திரேலிய மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர்.
கிரிக்கெட் அரங்கில் ஸ்மித் தலையில் அடிபட்டு அதிர்ச்சியடைவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸில் நடந்த ஆஷஸ் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை பதம் பார்த்தது.
2020 இல் இங்கிலாந்தில் நடந்த வெள்ளை பந்து தொடரிலும் ஸ்மித் உபாதைக்குள்ளாகி வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை அவுஸ்திரேலியா நேற்று சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்ரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM