பிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு தண்டனை

Published By: MD.Lucias

10 Oct, 2016 | 09:16 AM
image

பிரித்­தா­னிய புகை­யி­ர­தத்தில் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அச்­சு­றுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் ஒரு­வ­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று 10 மாத சிறைத்­தண்­டனையை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

 இந்த வழக்குத் தொடர்பில் பிரித்­தா­னிய ஊட­கங்கள் நேற்று முன்­ தினம் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. சுரேஷ்­குமார் துரை­ராஜா (44 வயது) என்ற மேற்­படி 

 இலங்கைத் தமிழர் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி லிவர் லைம் வீதி புகை­யி­ர­த­நி­லை­யத்­திற்குள் பிர­வே­சித்த போது, புகை­யி­ரத நிலைய உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அவரை வழி­ம­றித்து பய­ணச்­சீட்டைக் காண்­பிக்­கு­மாறு அவரைக் கோரி­யுள்ளார்.

 இதன்­போது பய­ணச்­சீட்டு எத­னையும் வைத்­தி­ராத சுரேஷ்­குமார், தான் புகை­யி­ர­தத்தில் குண்டுத் தாக்­குதல் நடத்தப் போவ­தாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவர் பிரித்­தா­னிய போக்­கு­வ­ரத்துப் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டார். எனினும் அவ­ரிடம் மேற்­கொண்ட தேடுதல் நட­வ­டிக்­கையில் அவ­ரிடம் குண்டு எதுவும் இருக்­க­வில்லை.

அவர் புகை­யி­ர­தத்தின் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொள்­ளவே அங்கு வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதன்­போது சுரேஷ் குமார் தற்­கொலை செய்து கொள்­ளு­மாறு தனது தலையில் ஒரு குரல் கட்­ட­ளை­யிட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

 இலங்­கையில் விடு­தலைப் புலி­க­ளுக்­காக உளவு பார்த்­த­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு அவரைக் கைது­செய்ய பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது..

 பிரித்­தா­னிய பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்ட அவர் சிகிச்­சைக்­காக மன­நல மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்தார்.

அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் இலங்­கையில் அவர் சந்­தித்த .பயங்­க­ர­மான நிகழ்ச்­சி­களால் அவர் மோச­மான மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தனர்.

பிரித்­தா­னி­யாவில் இதற்கு முன்னர் வேறு எந்தக் குற்­றச்­சாட்­டுகள் நிமித்­தமும் கைது­செய்­யப்­ப­டாத சுரேஷ்­குமார் , தொண்டு பணி­களில் தானாக முன்­வந்து ஈடு­பட்டு வந்­துள்ளார்.

அவர் பிரித்­தா­னி­யா­வி­லான அவ­ரது புக­லி­டக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டதால் மிகவும் மனம் உடைந்து போயி­ருந்­த­தாக அவ­ரது சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி எறிக் லாம்ப் தெரி­வித்தார்.

 இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த லிவர்பூல் கிறவுண் நீதி­மன்ற நீதி­பதி அனில் முர்ரே, சுரேஷ்குமாரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விடவும் அந்த அச்சுறுத்தல் அங்கு பீதியும் பதற்றமும் ஏற்படக் காரணமாகவிருந்ததாக தெரிவித்து அவருக்கு 10 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22