(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)
இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஹிஜாப் பற்றிய சர்ச்சை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் பெற்றுள்ளது.
இந்த சர்ச்சை கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, இந்தியாவின் ஏனைய பாகங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஆரசியலமைப்பில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் தேசத்தில் மத ரீதியான உணர்வுகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளன.
ஹிஜாப் விவகாரம் கர்நாடக நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.
பாடசாலைகளை மூன்று நாட்களுக்கு மூடுமாறு கர்நாடக மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைகள் திறந்தாலும் எவரும் மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் விடயங்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதில் ஹிஜாப்பும் அடங்கும்.
இந்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி இஸ்லாமிய உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளது, எனவே ஹிஜாப் விவகாரத்தை காரணம் காட்டி எவரும் ஆதரவாகவோ எதிராகவோ ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது, கூட்டம் கூட்டவும் கூடாதென பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பிரச்சினை தொடங்கியது எவ்வாறு?
இந்த மாநிலத்தின் உடுப்பி என்ற இடத்தில் உள்ள அரச பாடசாலை. அதில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த மாணவிகள் ஆறு பேருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அதனை ஆட்சேபித்து டிசம்பர் 31ஆம் திகதி தொடக்கம் மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM