இன்டர்நியூஸ் நிறுவனத்தின் “பாதுகாப்பான சகோதரிகள் ஸ்ரீலங்கா தோழமைத் திட்டத்தின்” கீழ் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது பகுதியை நிறைவு செய்யும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ரமாடா ஹோட்டலில் இடம்பெற்றது.
பயிற்சியாளர்கள் இன்டர்நியூஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி ஷிபான் அஹாமட் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன்
பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 11 பேர் தெரிவுசெய்யப்பட்டு டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வுகள் ஆய்வுகள் மற்றும் விளிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
நிரஞ்சனி ரோலண்ட்- தங்கப்பதக்கம்
இன்டர்நியூஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி ஷிபான் ஹாமட் மற்றும் ஏனைய அதிகாரிகளால் நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்தி செய்த பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கலாவர்ஷினி கனகரட்ணம் மற்றும் சாரா பத்திரண - வெள்ளிப்பதக்கம்
டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வை நடத்தியதற்காக நிரஞ்சனி ரோலண்ட் அவர்களுக்கு தங்கப்பதக்கமும் இ டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட கலாவர்ஷ்னி கனகரட்ணம் மற்றும் சாரா பத்திரண ஆகியோருக்கு வெள்ளிப்பதக்கமும் இ டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக மெய்நிகரில் செயலமர்வை நடத்திய நுஹா நஸார் மற்றும் ஜனனி கருணாவீர ஆகியோருக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நுஹா நஸார்- வெண்கல பதக்கம்
பாதுகாப்பான சகோதரிகள் திட்டத்தின் இரண்டாவது பகுதியாக டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பில் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் (ToT) நிகழ்வும் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM