உள்ளூராட்சிமன்ற, மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி

12 Feb, 2022 | 08:55 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யமுடியாத நிலை தற்போது உருவாகியிருக்கின்றது. 

எனவே தாம் ஆட்சிபீடத்தில் இருப்பதை மக்கள் விரும்புகின்றார்களா? இல்லையா? என்ற கேள்வியை அவர்கள் மீண்டுமொருமுறை மக்களிடம் கேட்டுப்பார்க்கவேண்டும். 

அதன்படி தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவரும் உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்திக்காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால்விடுகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பளையில்  சனிக்கிழமை 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. 

சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருக்கும் அரசாங்கம், அதனூடாக இந்நாட்டு ஊழியர்களுக்குச் சொந்தமான பணத்தைக்கூட கொள்ளையடிப்பதற்கு முயற்சிக்கின்றது. 

அரசாங்கத்தின் நிதிநெருக்கடிக்கு மக்கள் பலியாக முடியாதல்லவா? ஏற்கனவே நாட்டுமக்களிடமிருந்து பல்வேறு வரிகள் அறவிடப்பட்டுவருகின்றன.

மக்களைப் பாதுகாப்பதும் அவர்களது பிரச்சனைகளுக்குரிய தீர்வை வழங்குவதுமே அரசாங்கத்தின் கடமையாகும். இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. 

ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஏதேனும் காரணங்களைக் கூறுகின்ற அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யமுடியாதபட்சத்தில் தாம் ஆட்சிபீடத்தில் இருப்பதை மக்கள் விரும்புகின்றார்களா? இல்லையா? என்ற கேள்வியை மீண்டுமொருமுறை மக்களிடத்திலேயே கேட்டுப்பார்க்கவேண்டும். 

அதன்படி உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதன் ஊடாக மக்களின் அபிப்பிராயம் என்னவென்பதை அரசாங்கத்தினால் தெரிந்துகொள்ளமுடியும். 

தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டுவருகின்ற அவ்விரு தேர்தல்களையும் நடாத்திக்காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால்விடுகின்றோம். 

அதனூடாகவேனும் மக்களது நிலைப்பாடு என்னவென்பதையும் அவர்கள் தம்மிடமிருந்து விலகிச்செல்கின்றார்கள் என்பதையும் அரசாங்கத்தினால் புரிந்துகொள்ளமுடியும்.

அடுத்ததாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையக்கூடும் எனக்கூறி கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை முடக்கிய அரசாங்கம், அண்மையில் அநுராதபுரத்தில் பொதுகூட்டமொன்றை நடத்தியது. 

ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்காத சுகாதாரத்தரப்பினர், ஆளுந்தரப்பின் பொதுக்கூட்டத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? 

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் அர்த்தம் இதுவா? எதுஎவ்வாறெனினும் ஒமிக்ரோன் வைரஸ் பரவலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58