70 வயது மாமனார் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு ; மாமனாரை கொலை செய்த மருமகள்

09 Oct, 2016 | 04:48 PM
image

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார். 

தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். 

இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர். 

இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது. 

அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம். 

மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .

கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் 50 வயதான மருமகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த 70 வயது மாமானாரை மருமகள் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). இவரது மகன் அன்பழகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (50). சில வருடங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து போனார். 

தனது மகன், மகளுடன் மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வருகிறார் தமிழ்ச்செல்வி. கந்தசாமி கடந்த 30 ஆம் திகதி வீதியோரம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். 

இது வீதி விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தது சேத்தியாதோப்பு பொலிஸ் . ஆனால் இது விபத்து அல்ல. இவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று கந்தசாமியின் உறவினர்கள் முறைப்பாடு அளித்தனர். 

இதையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில் தமிழ்ச்செல்வி, தனது மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகனுடன் சேர்ந்து கொலை கந்தசாமியை கொலை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து தமிழ்ச்செல்வியைப் பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், கந்தசாமி அவ்வப்போது மது அருந்தி வந்து தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 30 ஆம் திகதி அவரின் தொந்தரவு அதிகரித்தது. 

அப்போது வீட்டில் இருந்த கட்டையால் அடித்து விட்டேன். இதில் கந்தசாமி உயிரிழந்தார். இதையடுத்து கந்தசாமியின் அண்ணன் மகன் வேல்முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன். அவர் விரைந்து வந்தார். இருவரும் சேர்ந்து நள்ளிரவில் வீதியோரம் விபத்தில் அடிபட்டு இறந்தது போல உடலைப் போட்டோம். 

மருமகள் என்றும் பாராமல் என்னிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார். என்னைக் காப்பாற்றிக கொள்ள எனக்கு வழி தெரியவில்லை. எனவேதான் கட்டையால் அடித்தேன். அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13