மன்னாரில் இடம்பெறவிருந்த இந்திய மீனவர்களின் படகு ஏலம் இடை நிறுத்தம்

Published By: Digital Desk 4

10 Feb, 2022 | 04:14 PM
image

தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) பகல் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு சென்றிருந்தனர்.

எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.

இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போதும் இறுதி நேரத்தில் குறித்த ஏல விற்பனை இடம்பெறாது என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து சென்றவர்கள் கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39