(ஜெ.அனோஜன்)
தேசிய சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் கொழும்பு வீரர் நுவனிந்து பெர்னாண்டோ தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சதம் விளாசியுள்ளார்.
பல்லகெலே சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கண்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இரண்டாவது முறையாகவும் சதம் விளாசினார்.
தற்சமயம் தேசிய சுப்பர் லீக்கில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை நுவனிந்து பெர்னாண்டோ பெற்றார்.
நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கிய நுவனிந்து மொத்தமாக 133 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்களைப் பெற்றார்.
நுவனிந்து இந்த சதத்தை பெற்றதன் மூலம் இந்த ஆண்டு தேசிய சுப்பர் லீக்கில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன்னதாக அவர் தம்புள்ளை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியிருந்தார்.
6 போட்டிகளில் விளையாடியுள்ள நுவனிந்து 2 சதம் மற்றும் ஒரு அரை சதத்துடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார். நுவனிந்துவின் இன்னிங்ஸ் சராசரி 54.66 ஆகும் அதேவேளையில் அவரது அதிகபடியான ஓட்ட எண்ணிக்கை 112 ஆகும்.
நுவனிந்துவின் சதம் இந்த சீசனில் பதிவான 5 ஆவது சதம் ஆகும்.
முன்னதாக, ஓஷத பெர்னாண்டோ (138), தனஞ்சய டி சில்வா (102), சித்தர கிம்ஹான் (110), நுவனிந்து பெர்னாண்டோ (100) ஆகியோர் சதம் விளாசினர்.
நுவனிந்துவின் இன்னிங்ஸால் கண்டிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொழும்பு அணி 49.3 ஓவர்களில் 271 ஓட்டங்களை எடுத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM