(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு நிவாரணமாக ஒரு மாதத்திற்கு 10 கிலோ மா கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால் இன்றுவரை எம் மக்களுக்கு மா கிடைக்கவில்லை, மக்களின் சிறுசிறு சேமிப்பை கூட அபகரிக்கும் விதமாக அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை வெளிப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 9 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபைகளை திருத்த சட்டமூலம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆனால் நாட்டில் மாகாணசபைகளே இல்லை என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை.
மக்களுக்கு நேர்மையான மாகாண சபைகளை உருவாக்கிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாது, சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாது உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நேரத்தில் வேலை நிறுத்தத்த செயற்பாடுகளுக்கு தீர்வுகளை வழங்கி மக்களின் பக்கம் சிந்திக்க வேண்டும். மாறாக வேலை நிறுத்தத்தை தூண்டும் விதமாக செயற்படக்கூடாது.
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு நிவாரணமாக ஒரு மாதத்திற்கு 10 கிலோ மா கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால் இன்றுவரை மா கிடைக்கவில்லை.
அரசாங்கம் பொய்களை கூறாது மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். அதேபோல் ஊழியர் சேமலாப நிதியிலும் அரசாங்கம் கை வைத்துள்ளது.
மலையகத்தில் வாழும் மக்கள் இந்த நிதியை பெற்றுக்கொண்டு தான் இறுதிக்காலத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
அதற்கும் 25 சதவீத வரி என கூறி அவர்களின் கையிருப்பை அபகரிக்க எடுக்கும் நடவடிக்கை மோசமானது.
மக்களின் சிறுசிறு சேமிப்பை கூட அபகரிக்கும் விதமாக அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை வெளிப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM