உலக சனத்தொகையில் 50% முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலால் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 40.34 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்ட ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் கூறும்போது,
உலக சனத்தொகையில் முழு அளவில் 50% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில் நாம் இருக்கிறோம்.
சர்வதேச அளவில் நோயெதிர்ப்பு பெறுவதற்கான பிரசாரம் வெற்றி பெறுவதற்கு உறுதுணை புரியும் அடுத்த கட்ட முயற்சிகள் தேவையாக உள்ளன என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதுவரை 165 நாடுகளுக்கு, 170 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கி ஐரோப்பா உதவி செய்துள்ளது என்றும் கிரியகைட்ஸ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM