புகழ்பெற்ற காய்கறி வகைகளில் ஒன்றான கத்தரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாகும்.
பிஞ்சுக் கத்தரிக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து செய்யும் சமையலானது ஆஹா! மிகவும் அற்புதமாக இருக்கும்.
கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைதரேட், பாஸ்பரஸ், கல்சியம், விற்றமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.
இந்த கத்தரிக்காய் வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது.
கத்தரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொறுத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும்
நன்மைகள்
கத்தரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது.புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.கத்தரிக்காயில் அன்டி அக்ஸிடென்டுகள் இருப்பதால், நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைத்து, உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
கத்தரிக்காயிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ், நமது சருமத்தை மென்மையாக்கி, நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. மேலும் மூளைச் செல்களை பாதுகாத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
விற்றமின்கள் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏன் அலர்ஜி ஏற்படுகிறது?
கத்தரிக்காயில் அதிகப்படியான புரோட்டின், சோலனைன், ஹிஸ்டமின் இருப்பதால், கத்தரிக்காய் சாப்பிடும் சிலர் உடம்பின் தன்மைக்கு ஒத்துப் போகாமல் அலர்ஜியை உண்டாக்குகிறது.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும். இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட காரணமாக உள்ளது.
ஹிஸ்டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். எனவே, ஹிஸ்டமின் அதிகம் உள்ள உடலிற்கு ஒவ்வாத கத்தரிக்காயை நாம் சாப்பிடும் போது, நம் உடம்பில் சரும அலர்ஜி, கொப்புளம் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM