மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த வருடத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் மத்தளை சர்வதேச விமான நிலையத்தினூடாக சர்வதேச விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு உலக நாடுகளின் விமான சேவை நிறுவனங்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக இதுவரையில் மொத்தமாக 32,957 பேர் விமானசேவைகளை பெற்றுள்ளதாகவும் இதற்காக 722 விமான பயணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் 584 சிறப்பு விமான பயணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி மூன்றாம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு இதுவரையில் 2919 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM