பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது , வைத்தியர்களால் மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாதம் கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்க்கொண்ட விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் பதுளைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் மூன்றாவது சந்தேக நபரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM