(நா.தனுஜா)
இலங்கை மத்திய வங்கியின் வசம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருப்பாகக் காணப்பட்ட 175.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம், இவ்வருடம் ஜனவரி மாதத்தில் 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி கடந்த ஒருமாத காலத்தில் 83.4 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி நவம்பர் மாதம் (2021) 382.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட தங்கத்தின் இருப்பு, டிசம்பரில் 206.8 மில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்து 175.4 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் மத்திய வங்கியின் வசமிருந்த 83.4 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் செயற்திறனற்ற பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பு வெகுவாக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் நாடு பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.
இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கான மத்திய வங்கி அதன்வசமுள்ள தங்கத்தை விற்பனை செய்வதாகவும் இது நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக அவ்விடயத்தை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள ஹர்ஷ டி சில்வா, வெளிநாட்டுகையிருப்பு 2.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட 10 பில்லியன் யுவான்களைப் (1.57 பில்லியன் டொலர்கள்) பயன்படுத்த முடியாது என்பதால் 2.36 பில்லியன் டொலர்களிலிருந்து அதனைக் கழிக்கும்போது, பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 800 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடையும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது 3 வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குரிய இறக்குமதிகளுக்கு மாத்திரமே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.
'இப்போதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்றுதான் மத்திய வங்கியின் ஆளுநர் கூறப்போகின்றாரா?' என்று கேள்வி எழுப்பியுள்ள கலாநிதி ஹர்ஷ டி சில்வா, 'கையிருப்பில் காணப்பட்ட தங்கத்தில் சுமார் 50 சதவீதமான தங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடவிரும்பாத அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் மத்திய வங்கி ஆளுநரும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அனைத்தும் சுமுகமான நிலையிலிருப்பதாகவும் கூறுகின்றார்கள்' என்றும் விசனம் வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM