(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நனோ நைட்ரிஜன் உரம் பயன்பாட்டில் இந்தியா எம்மைவிட அனுபவம் உள்ள நாடு என்பதால், இந்தியாவில் இருந்து குறித்த திரவ உரத்தை கொண்டுவந்தோம்.
அவ்வாறு இல்லாமல் எமது விவசாய நிலத்தை இந்தியாவுக்கு பரிசோதனைக்காக வழங்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்க்கிழமை (9 ) ஆம் திகதி நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பெரும்போகத்தின் போது இந்தியாவின் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு 8இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் நெனோ நைட்ரிஜன் உரத்தை பரிசோதனைக்காக இடமளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
65மில்லியன் உருப்பினர்களை அங்கத்துவம் கொண்ட கூட்டுறவு சங்கம்தான் இந்தியாவின் இஸ்கோ நிறுவனம். சேதன பசளை திட்டத்துக்கு நாங்கள் செல்லும்போது அதுதொடர்பில் எமக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்டிருந்தோம்.
அதன் பிரகாரம் சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனையின் பிரகாரம் அங்கிருந்து சேதன உரத்தை கொண்டுவர தீர்மானிதோம்.
என்றாலும் குறித்த உரத்தின் தரம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக அதனை நாங்கள் இடைநிறுத்தினோம்.
அதனைத்தொடர்ந்து இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பிரகாரமே நெனோ நைட்ரிஜன் திறவ உரத்தை கொண்டுவர முடியுமாகியது.
நெனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி, எமது நாட்டிலும் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுத்துவந்தோம்.
என்றாலும் இந்தியா இதில் எம்மைவிட அனுபவம் உள்ள நாடு என்பதால், இந்தியாவில் இருந்து குறித்த திறவ உரத்தை கொண்டுவந்தோம்.
இவ்வாறு இல்லாமல் எமது விவசாய நிலத்தை இந்தியாவுக்கு பரிசோதனைக்காக வழங்கப்படவில்லை.
மேலும் இதுதொடர்பாக கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் குறித்த திறவ உரம் தொடர்பாக இந்திய கமத்தொழில் அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்களை எமது அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர். அவர்களின் பரிந்துரைக்கமையவே நைட்ரிஜன் திறவ உரத்தை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM