(எம்.எம். சில்வெஸ்டர்)
கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான முதல் கட்ட தேசிய மெய்வல்லுநர் தகுதி காண் போட்டிகளை நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த தகுதி காண் போட்டிகள் நாளை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் தென் கொரியாவில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கனிஷ்ட விளையாட்டு விழா மற்றும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சீனாவில் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாக்களில் இலங்கை வீர, வீராங்கனைகளை பங்கேற்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த தகுதிகாண் போட்டிகளை நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பலத்த கட்டுப்பாட்டுக்களுக்கு மத்தியில் இந்த கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசிய தகுதி காண் போட்டிகளை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் நடத்துகிறது.
முதல் கட்ட தகுதிகாண் போட்டிகள் நடந்து முடிந்ததன் பின்னர், இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM