(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் இதனால் பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும்.
இப்பிரச்சினையின் பாரதூர தன்மையினை விளங்கிக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதி,உணவு பொருள் விநியோகத்துடன் தற்போது மருந்துபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது .
சந்தையில் 80 சதவீதமான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய மருந்து பொருட்கள் கொள்வனவு மற்றும் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் மருத்து துறையில் இலவசமாக வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைமைகளையும்,மருத்துவ உபகரணங்களையும் தற்போது பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
அக்காலக்கட்டத்தில் 25000 ரூபாவிற்கு வழங்கப்பட்ட கண் வில்லைகள் தற்போது இலட்ச கணக்கிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மருந்துக்கான விலைக்கட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் தனியார் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை கண்காணிக்க சுகாதார அமைச்சு மட்டத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
டொலர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற காரணத்தினால் ஒளடத இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்கொள்கிறார்கள்.
மருந்து இறக்குமதிக்கான கடன் பற்று பத்திரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகிறது. பெனடோல் குழிசைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் சாதாரண நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் வெளிப்படைத்தன்மை யின் மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
எதிர்வரும் 3மாத காலத்திற்குள் நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்படும்.பல நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையில் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் மரணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதனை பாரதூரமான பிரச்சினையாக கருதி அரசாங்கம் உரிய தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM