(நா.தனுஜா)
பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்குப் பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் எதிர்பார்க்கப்பட்டவாறான பெறுபேற்றைத் தராத நிலையில், அதனை முழுமையாக இல்லாதொழிப்பதுடன் அதுவரையில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டு, சதிசெய்தமை மற்றும் சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டிய குற்றச்சாட்டுக்களின்கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
இந் நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 'மனசாட்சியின் கைதியாக' அடையாளப்படுத்தியதுடன் எவ்வித நிபந்தனைகளுமின்றி அவரை முழுமையாக விடுதலைசெய்யவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த சர்வதேச மன்னிப்புச்சபை, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM