(என்.கண்ணன்)
ஒற்றையாட்சிக்குள் அமைந்த 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை முடக்கும் சதியை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்த பேரணி, வடக்கில் மீண்டும் ஒரு அரசியல் போராட்டத்துக்கான, வெளியைத் திறந்து விட்டிருக்கிறது.
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கவில்லை.
அவ்வப்போது, சில பிரச்சினைகளை முன்வைத்து, போராட்டங்கள் எழுச்சி பெறுவதும், பின்னர் அவை தணிந்து போவதுமாகவே, கடந்த 13ஆண்டுகளும் கடந்து போயிருக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் மட்டும் தொடர் போராட்டமாக இடம்பெறுகிறது.
அதுவும் ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கானோருடன் தொடங்கி, நூற்றுக்கணக்காக குறைந்து, இப்போது சில பத்துப் பேர்களுடன் நடக்கும் ஒன்றாக சுருங்கியிருக்கிறது.
ஆனாலும் உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, உயர்பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க கோரி, நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இராணுவ மயமாக்கலைக் கண்டித்து, என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிரான அரசியல் போராட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-06#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM