மின் வெட்டு தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்

Published By: Vishnu

06 Feb, 2022 | 04:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில்  தேவைக்கமைய மின் விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த தகவலை கூறினார்.

மின்னுற்பத்திக்கும்,தேசிய மின்விநியோகத்திற்கும் இடையில் 300 மெகாவாட் இடைவெளி காணப்படுகிறது. இந்நிலைமையை சீர்செய்ய மின்சாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கையினை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என வலுசக்தி துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை இன்று வரை தொடர்ச்சியாக விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்தது.

வலுசக்தி அமைச்சின் கடமைகளுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதில் மீண்டும் சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த காலத்தை காட்டிலும் தற்போது மின்பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளத. 2750 மெகாவாட் மின்பாவனைக்கான கேள்வி அதிகரிக்கப்படுமாயின் மின்விநியோகத்தை துண்டிக்க நேரிடும். இவ்விடயம் குறித்து நாளை மின்சார சபையின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59