(ஆர்.ராம்)
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கு முழுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு தமிழ்க் கட்சிகள் கடிதமொன்றை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளன.
இந்தக் கடிதத்தினை அனுப்புவது தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனிடத்தில் கடிதத்தின் வரைவினை தயாரிக்கும் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன.
தற்போதைய நிலையில் ரெலோ, புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகியன இக்கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு இணக்கம் கண்டுள்ளன.
அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணத்தில் கையொப்பமிட்ட ஆறு அரசியல் கட்சிகளையும் ஏழு தலைவர்களையும் இந்தக் கடிதத்திலும் உள்வாங்குவதற்கு அடுத்தகட்டமாக நடவடிக்கைகளை எடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடமும் கையொப்பத்தினை பெறுவது பற்றி பேச்சுக்கள் முன்னெடுக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM