உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

Published By: Digital Desk 3

05 Feb, 2022 | 04:21 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத்தார உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. நாளை ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இம்முறை 3 இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில் ,

345,000 பரீட்சாத்திகள்

இம்முறை பாடசாலை ஊடாக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 142 பரீட்சாதிகளும் , 66,101 தனியார் பரீட்சாத்திகளும் , ஒட்டுமொத்தமாக 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை மத்திய நிலையங்களும் , 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட பரீட்சாத்திகளுக்கென விசேட பரீட்சை மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விசேட பரீட்சை நிலையங்கள்

கொவிட் தொற்றுக்கு உள்ளானோருக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கொவிட் தொற்றுக்கு உள்ளான பரீட்சாத்திகள் தமது சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்து , இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை எழுத முடியும்.

அது மாத்திரமின்றி தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியமையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் , அறிகுறிகளுடையோருக்கு பிரதான பரீட்சை மண்டபங்களில் பிரத்தியேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

சுகாதார மருத்துவ அதிகாரி ஊடாக பாடசாலை அதிபருக்கு அறிவித்து , இந்த பிரத்தியேக அறைகளில் பரீட்சைக்கு தோற்றமுடியும்.

இலத்திரனியல் உபகரணங்களுக்கு அனுமதி இல்லை

இலத்திரனியல் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட அநாவசிய பொருட்கள் எதனையும் பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

8 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்க வேண்டும்

காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 7.45 - 08.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள் பரீட்சை மண்டபங்களுக்குள் சமூமளிக்க வேண்டியது அவசியமாகும்.

தேசிய அடையாள அட்டை அவசியம்

அத்தோடு தேசிய அடையாள அட்டையைக் கொண்டு வருவதும் அத்தியாவசியமானதாகும். தவிர்க்க முடியாத நிலையில் தேசிய அடையாள அட்டை அற்றவர்கள் தமது புகைப்படத்துடன் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் சமூகமளிக்க வேண்டும். 

எவ்வாறிருப்பினும் தேசிய அடையாள அட்டை அற்றவர்களின் பரீட்சை பெறுபேறுகள் உண்மை தன்மை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் சற்று தாமதமாகவே வெளியிடப்படும்.

பரீட்சை ஆணையாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுமாயின் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011-2784208 / 011-2784537 என்ற இலக்கங்களுக்கு அல்லது பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் 071-4679679 என்ற நேரடி கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011-2784427 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரே தொகுதியில் இரு பாடங்களை தெரிவு செய்துள்ளோர்

ஒரே தொகுதிக்குள் காணப்படும் இரு பாடங்களை தெரிவு செய்துள்ள பரீட்சாத்திகள் முதலாவது பரீட்சை நிறைவடைந்த பின்னர் , பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறாமல் அடுத்த பரீட்சையையும் எழுத தயாராக வேண்டும். (உதாரணமாக இந்து நாகரீகம் மற்றும் கத்தோலிக்க சமயம் ஆகிய ஒரே தொகுதிக்குள் அடங்கும் இரு பாடங்களை தெரிவு செய்துள்ள பரீட்சாத்திகள்) என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31