(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த 7 பேரை , சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவை நேற்று முன் தினம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை பிறப்பித்தார்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இந்த 7 சந்தேக நபர்களையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்த நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
சுமார் ஒரு வருட காலத்துக்கும் மேலதிகமாக தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர்கள் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சந்தேக நபர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 35 மாணவர்களுக்கு மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகளில் அடிப்படைவாத பயிற்சி முகாம்களை நடாத்தி, உபதேசங்களை முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் குறித்த அடிப்படைவாத உபதேசங்களை நெறிப்படுத்தியுள்ளதாகவும் அவர்களது அந் நடவடிக்கைகளில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்திய சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட குண்டுதாரிகள் பலர் வளவாளர்களாக கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் பிரச்சாரங்களையும் செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் இந்த விசாரணைக்கு அமைவான கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது குறித்த சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் சந்திம லியனகே சந்தேக நபர்களை சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஒலுவில் பகுதியைச் சேர்ந்த அப்துல் காசிம் மொஹமட், யூசுப் பர்சான், மாவனெல்லையைச் சேர்ந்த கஜன், கமால் மொஹம்மட், சஹாப்தீன் மொஹமட் , மூதுரைச் சேர்ந்த இப்ரஹீம் மொஹம்மத் மற்றும் மொஹம்மட் தாரிக் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்ப்ட்டவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM