(ரி.விரூஷன்)
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சட்டவிரோதமாக குடு போதைப்பொருளை வைத்திருந்த இருவரை யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழான புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்டனவின் கீழ் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விஷேட புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதன்பிரகாரம் விசாரனைகளை ஆரம்பித்த புலனாய்வு பிரிவினர் சுன்னாகம் பகுதியில் குடு போதைப்பொருளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்த இருவரை கைது செய்திருந்தனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20-30 மில்லிக்கிராம் நிறையுடைய 45 குடுபோதைப்பொருள் பைக்கற்றுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவர்களும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்களில் ஒருவர் இதனை உடமையில் வைத்திருந்ததாகவும் மற்றைய நபர் இதனை உள்ளூரில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த இருவரிடமும் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் இவர்களை சுன்னாகம் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவானிடம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத்துறை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM