ரயிலில் இருந்து விழுந்த பிரான்ஸ் பிரஜை படுகாயம்

04 Feb, 2022 | 01:32 PM
image

பதுளை – கொழும்பு இரயிலில் இருந்து பிரான்ஸ் நாட்டு பெண்மணியொருவர் கீழே விழுந்து, காயமடைந்ததையடுத்து, ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் இன்று ஒகியவிற்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடைப்பட்ட பகுதிலேயே, இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலிலேயே, மேற்படி பிரான்ஸ் நாட்டுப் பெண் மிதி பலகையூடாக கீழே விழுந்துள்ளார். 

மேலும், இப் பெண்ணை காப்பாற்ற முயன்றவரும் ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார். 

இவரும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்