ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் ; அருந்திக பெர்னாண்டோவின் அதிரடி முடிவு

Published By: Vishnu

03 Feb, 2022 | 03:45 PM
image

(ஜெ.அனோஜன்)

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடப்படும் வரையில் தான், அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராகமவில் அமைந்துள்ள களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாக மாணவர்கள் மீது நேற்று காலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அவரது 23 வயது மகன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 07 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் அஜர்படுத்தியபோது, நீதிவான் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு மாணவர்கள் உட்பட 05 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அருந்திக பெர்னாண்டோ தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55