(ஜெ.அனோஜன்)
களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெலிசறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் அவர்களை பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று களுபோவில பிரதேசத்தில் வைத்து ராகம பொலிஸாரால் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகம், ராகம வைத்திய பீட வளாகத்தில் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் நேற்று அதிகாலை குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் மாணவன் இந்த தாக்குதல் சம்பவத்தின் மற்றொரு சந்தேக நபர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM