சூப்பர் ஹீரோவான எம்.எஸ்.தோனி

Published By: Vishnu

03 Feb, 2022 | 01:27 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை தனது அதர்வா என்ற கிராஃபிக் நாவலின் முதல் தோற்றத்தை வெளியிட்டார்.

Image

கிராபிக் நாவலான அதர்வா - தி ஆரிஜின் என்ற நாவலில், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றுகிறார். 

இந்த நாவல், தோனியின் முதல் பேண்டஸி பிக்சன் ஆகும். 

கதையை ரமேஷ் தமிழ் மணி எழுதியுள்ளார். இதற்காக, 150 க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Image

இந்நாவல் குறித்த தோனி கூறியதாவது: 

இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா - தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும் மற்றும் அதி அற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.

எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது யோசனையை கேட்டவுடனே, சம்மதித்தேன் என்றார்.

இந் நாவலின் வெற்றியை தொடர்ந்து இதைப்படமாக எடுக்கும் முயற்சியும் உருவாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right