உடம்பில் தண்ணீர் படாமல் நீச்சலடிக்க முடியுமா ? - வாசுதேவ கேள்வி 

Published By: MD.Lucias

07 Oct, 2016 | 04:02 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் மக்கள் நிலைப்பாட்டை அறிய பன்னாடுகளும் ஆர்வமாக உள்ள நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வலியுறுத்தல்கள் சர்வதேச ரீதியில் இருந்துவர ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார , உடம்பில் தண்ணீர் படாமல் நீச்சலடிக்க முடியாது . அதே போன்று வருட இறுதிக்குள் தேர்தலை வைத்தே ஆக வேண்டிய நிலையில் நல்லாட்சி அரசாங்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

கூட்டம் நடத்துவதற்கு மைதானங்கள் கூட அரசாங்கம் வழங்காது பல்வேறு தடைகளை ஏற்படுத்துகின்றது. எவ்வாறாயினும் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. 

ஜனநாயகம் தொடர்பாக செயற்படும் சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் மக்கள் ஆணையை அறிய விரும்புகின்றன. 

இதற்காக அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களையும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

எனவே என்ன கூட்டு ஆடினாலும் ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும். 

உடம்பில் தண்ணீர் படாமல் நீச்சலடிக்க முடியாததை போன்று தேர்தலை நடத்தாது மக்கள் ஆணையை மதிப்பிட முடியாது என குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்~வின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47