அனுர சேனாநாயக்க பிணை மனுவின் விசாரணை ஒத்திவைப்பு 

Published By: Ponmalar

07 Oct, 2016 | 03:09 PM
image

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரனவக்க குணதிலக இன்று (07) பிறப்பித்துள்ளார்.

றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்