(இராஜதுரை ஹஷான்)
ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை தற்காலிகமாக ரூபா அலகில் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மின்விநியோக கட்டமைப்பில் நிலவும் சிக்கல் நிலைமைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை சேவை தொழிற்சங்கத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மின்விநியோக கட்டமைப்பில காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலமும் தடையின்றிய வகையில் பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை விநியோகிப்பது மின்சார சபை சேவையாளர்களின் பிரதான பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கினார்.
வறட்சியான காலநிலை தொடர்கிற காரணத்தினால் நீர்மின்னுற்பத்தியை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நிலக்கரி மின்னுற்பத்தியினை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளது.
ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை முதற்கட்டமாக பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து ரூபா அலகில் எரிபொருளை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க வளம் தொடர்பில் இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தினர் விசேட யோசனைகளை முன்வைத்தார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM