இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
கல்வியாளரும், தொழிலதிபரும், அரசியல்வாதியுமான ஏ.சி. சண்முகம் அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் மீடியா எனும் நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் மாளவிகா சர்மா, 'பிகில்' பட புகழ் அமிர்தா ஐயர், 'பிக் பொஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கிறார்கள். விச்சு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப்படத்தின் தொடக்க விழா சென்னையில்
நேற்று பூஜையுடன் தொடங்கியது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், கோடைகாலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் சுந்தர் சி பேய் படத்தினையும், காமெடி கலந்த ஆக்ஷன் படத்தினையும் இயக்குவதில் வல்லவர் என்பதாலும், மினிமம் கேரன்டி படைப்பாளி என்பதாலும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தொடக்க நிலையிலேயே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM