(சிவலிங்கம் சிவகுமாரன்)
ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மலையக சமூகம் தொடர்பில் ஒன்றும் கதைக்கவில்லையென எதிர்த்தரப்பின் மலையக பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
எனினும் ஆளும் தரப்பில் இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ, ஜனாதிபதியின் உரையை நியாயப்படுத்தும் விதத்தில், மலையக மக்களும் இலங்கை பிரஜைகளே அவர்களை தனியாக குறிப்பிடப்பட வேண்டியதில்லையென பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்திருந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் மலையக சமூகம் என்ற அடையாளப்படுத்தல் இந்நாட்டில் எமது மக்களுக்கு அவசியமானதொன்று என்றும் அந்த அடையாளத்தை வைத்தே இந்த சமூகத்துக்கு சில வரப்பிரசாதங்கள் கடந்த காலங்களில் கிடைத்தன என்றும் எமது சமூகத்துக்காக உள்ள சில தனித்துவ அடையாளங்களை எக்காலமும் இழக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
மேலும் மலையக மக்களையும் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்றே இந்த அரசாங்கம் நோக்குகின்றது என்றால், ஏன் அவர்களுக்கு மட்டும் கோதுமா சலுகையை வழங்கி தனித்து யாசகர்கள் போன்று காட்ட வேண்டுமென்றும் சம்பள விடயத்தில் ஏன் இந்த பாகுபாடு என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.
ஜீவனின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ள வடிவேல் சுரேஷ் எம்.பி.யோ, மலையக மக்களை தேசிய இனமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இருந்தால், நாட்டின் ஏனைய மக்களுக்கு கிடைக்கக்கூடிய சகல அம்சங்களும் இந்த மக்களுக்கும் கிடைக்க அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என்றும் வாய் பேச்சில் மாத்திரம் எம்மை தேசிய இனம் என்று நாமே சொல்லிக்கொள்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-30#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM